Fri. Apr 26th, 2024

பெரும்போகத்திற்கான டீச‌ல் வழங்கப்படவுள்ளது.

பெரும்போகத்திற்கான நிலத்தைப் பண்படுத்துவதற்காக முதல் கட்டமாக கரவெட்டி கமநல சேவை நிலையத்தினரால் நாளை டீசல் வழங்கப்படவுள்ளது.

ஏக்கருக்கு 8 லீற்றர் என்றடிப்படையில் நாளை முதல் கட்டைவேலி பல நோக்கு கூட்டுறவு (நெல்லியடி) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழங்கப்படவுள்ளது.
டீசலை பெற்றுக் கொள்ள வருபவர்கள் ஏக்கர் வரி பற்றுச் சீட்டு,  சந்தா பற்றுச் சீட்டு,  தேசிய அடையாள அட்டை என்பவற்றை கொண்டு வருதல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கரணவாய், இமையாணன், அத்தாய், கரணவாய் மத்தி கிராம அமைப்புக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரைக்கும், உடுப்பிட்டி தெற்கு,  உடுப்பிட்டி மத்தி கமக்கார அமைப்புக்கள் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரைக்கும்,  கரணவாய் தெற்கு,  இமையாணன் மேற்கு கமக்கார அமைப்புக்கள் நண்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரைக்கும், துன்னாலை மத்தி,  துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்புக்கள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரைக்கும் வழங்கப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்