புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா
சரித்திர பிரசித்தி பெற்ற ,கிளிநொச்சி
கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய 2023ம் ஆண்டு பங்குனி உத்தர மாபெரும் பொங்கல் விழா..
ஆரம்பம் ‘, 29,03.2023 புதன்கிழமை.
( விளக்கு வைப்பு )
நிறைவு’ பங்குனி உத்தரம் 05.04.2023 புதன்கிழமை
இரவு பாரம்பரிய பண்டம் எடுத்தல் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறும்..
தினமும் காலை 09.00 மணிக்கு நாகேஷ்வரி அம்பிகா சமேத நாகலிங்கேஷ்வரப் பெருமானுக்கும், நாகதம்பிரான் பெருமானுக்கும் சங்காபிஷேகம் இடம்பெற்று
தினமும் காலை 07.00 மணிக்கு பூஜை.
நண்பகல் 12.00 மணிக்கு விஷேட வசந்த மண்டப பூஜைகள் என்பன இடம்பெறும்..
மாலை 05.00 மணிக்கு பூஜைகள் இடம்பெறும்.
தினமும் காலை 07.00மணி தொடக்கம் மாலை 07.00 மணிவரைக்கும் ஆலயம் நடை( கதவு) திறக்கப்பட்டிருக்கும்.
05.04.2023 புதன்கிழமை பங்குனி உத்தர பொங்கல் தினத்தில் காலை 05.00 மணிக்கு சங்காபிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து அடியவர்களுடைய அர்ச்சனைகள் நேர்த்திகடன்கள் மறுநாள் காலை வரைக்கும் இடம்பெறும்.
அடியார்கள் அர்ச்சனை செய்பவர்கள், நேர்திகடன் செய்ய விரும்புவர்கள் இந்த விழா காலங்களில் காலை.07.00 மணி தொடக்கம் மாலை 07.00 மணிவரைக்கும் வழிபாடுகளை செய்வதற்கு ஆலய தர்மகர்த்தா சபையினர், பரிபாலன சபையினர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்…
அனைவரும் வருக தம்பிரான் திருவருள் பெறுக…