Fri. May 3rd, 2024

புலிகள் பற்றி சம்பந்தன் தெரிவித்த கருத்திற்கு கண்டனம்!! -வலுக்கிறது கூட்டமைப்பிற்கான எதிர்ப்பு-

தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா தெரிவித்தார்.

புலிகள் அழிக்கப்பட்டமை எந்த வகையில் நல்ல விடயம்? யாரை திருப்திப்படுத்த இவ்வாறான கருத்தை சம்பந்தனர் கூறினார் என்பதையும் பகிரங்கமாக மக்களுக்கு கூறவேண்டும் என்று அவர் மேலும் கோரியுள்ளார்.

யாழ்.நல்லூர் வீதியில் உள்ள தமிழ் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ் மக்களின் இன விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்படடமை நல்லதொரு விடயம் என சம்பந்தன் கூறியமை ஓர் பாரதூரமான கருத்து.

கூட்டமைப்பின் தலைவராக அதிலும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பெருந்தலைவராக கூறப்பட்ட அவரது வாயில் இருந்து இவ்வாறான கருத்து வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்