துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது!! -ஓமந்தையில் சம்பவம்-
ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் வைத்து துப்பாக்கி ரவையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தை பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி ரவைகள் இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது.
இதன்படி இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் குறித்த வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு நடத்திய தேடுதலின் போது வீட்டிற்கு முன்பாகவுள்ள பூச்சாடியிலிருந்து வு56 துப்பாக்கி ரவைகள் 189ம் , எம்.ரி ரவைகள்154 ம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளரான 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.