பயத்தில் நடுங்கும் ராஜித, எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்ஜாமீன் கேட்டு மனு
வெள்ளைவான் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் முன்ஜாமின் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கிடைத்த தகவலை தொடர்ந்தே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்