Fri. May 3rd, 2024

மாங்காய் புடுங்குவதில் பிரச்சினை , கத்திக்குத்தில் முடிந்த சோகம்  

வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட இருவர் கைகலப்பில் மாறி கத்திக்குத்தில் முடிவடைந்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 6.45 மணியளவில் நடைபெற்றது.
சம்பவத்தில்  கொடிகாமம் தவசிகுளத்தைச் சேர்ந்த சிவராசா சிலக்சன் என்பவரே கழுத்தில்  படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாங்காய் பிடுங்கிக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தகராறு இறுதியில் கத்திக்குத்தில் முடிந்ததுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளார்கள் .
சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலீஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்