Tue. Apr 30th, 2024

பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்ற இளைஞன் வைத்தியசாலையில்.

பிறந்தநாள் கொண்டாவடுவதற்காக கொழும்பிலிருந்து தனது சொந்த ஊரான திருகோணமலைக்கு செ ன்ற இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளாா்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை-இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த

முகம்மது முபீஸ் (21வயது) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த இவர்

இன்று தனது 21 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக அவரது சகோதரர்கள் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்த போது அவர் நேற்றிரவு கொழும்பிலிருந்து

திருகோணமலைக்கு சென்றதாகவும் இன்று அதிகாலை ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த இளைஞர்  தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்