Fri. May 3rd, 2024

பருத்தித்துறை சுகாதார பிரிவில் 14 பேருக்கு தொற்று

பருத்தித்துறை சுகாதார பிரிவில் 14 பேர் உட்பட யாழ் மாவட்டத்தில் நேற்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார பிரிவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஒருவருக்கும்,  சந்நிதி ஆலயத்தில் கலாமன்றம் ஆச்சிரமத்தில் இருவருக்கும்,  அச்சுவேலி பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் புலோலி வடகிழக்கைச் சேர்ந்த ஒருவருக்கும்,  கற்கோவளப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், புலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சுப்பர்மடம் முனியப்பர் ஆலயத்தில் கைதடியைச் சேர்ந்த ஒருவருக்கும், செல்வச்சந்நிதி ஆலயத்தில் உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் என 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெளியான முடிவுகளின் அடிப்படையில் வேலணை சுகாதார பிரிவில் 12 பேருக்கும்,  தெல்லிப்பளை சுகாதார பிரிவில் 5 பேருக்கும்,  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  வசாவிளான் தனிமைப்படுத்தல் பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று வெளியான அன்ரிஜன் பரிசோதனையில் யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 6 பேருக்கும்,  சாவகச்சேரி சுகாதார பிரிவில் 5 பேருக்கும்,  உடுவில் சுகாதார பிரிவில் 5 பேருக்கும்,  கோப்பாய் சுகாதார பிரிவில் 4 பேருக்கும்,  காரைநகர் சுகாதார பிரிவில் இருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்