Mon. Apr 29th, 2024

பயணிகள் பேருந்து மீது மோதிய இராணுவ வாகனம். மயிரிழையில் தப்பிய பயணிகள்.

வேக கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனம் இ.போ.ச பயணிகள் பேருந்து மீது மோ தி விபத்துக்குள்ளான சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்இநேற்று இரவு 8.30 மணி அளவில் பனிக்கன்குளம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் பயணியை ஏற்றுவதற்காக

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து பயணியை ஏற்றிக்கொண்டு தனது பயணத்தை ஆரம்பிக்க முற்பட்டது.

இதன்போது பின்னால் வந்த இராணுவ வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியதால்

பேருந்து சேதமடைந்துள்ளது. தெய்வாதீனமாக உயிரிழப்புகள் காயங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை

மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்