Mon. Apr 29th, 2024

ஆட்டோவுக்கு காசு கேட்ட ஆட்டோ ஓட்டுனர் மீது மிருகத்தனமான தாக்குதல்.

வவுனியா நகரிலிருந்து வாடகைக்கு ஆட்டோவை எடுத்த 3 பேர் வவுனியா- வேப்பங்குள ம் பகுதியில் இறங்கியதுடன் ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற பின்னர் ஆட்டோ வாடகை பணமான 250 ரூபாயை முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் கேட்டநிலையில்

பணத்தை தர முடியாது என கூறி ஆட்டோ சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் ஆட்டோவையும் சேதமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து குறித்த பகுதிக்கு சென்ற ஏனைய
ஆட்டோ சாரதிகள் அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் தாக்கியதாக தெரிவிக்கப்படும் இளைஞனை கைது செய்ததுடன் அவரிடமிருந்து

கூரிய ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். குறித்த நபர் கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ சாரதியான பா.சிறிதரன்  51 வயது என்ற குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்