Thu. May 2nd, 2024

பன்றித்தலைச்சி அம்மன் பூசாரியை தாக்கி கொள்ளை

29.05.2020 யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் பூசாரியை  தாக்கி கொள்ளையர்கள் அவருடைய வீட்டில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கோயிலுக்கு அண்மையில் தனித்து வாழும் பூசகர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 3 மணி அளவில் பூசகரின் வீட்டில் நுழைந்த இருவர்  அவரைத்  தடிகளால் சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த நகைகள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பன உள்ளடங்கலாக 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை  கொள்ளையிட்டு  சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இதனிடையே சாவகச்சேரியில் கல்வயல் கிராமத்தில் உள்ள ஆலயங்கள் இரண்டில்  ஒளி ஒலிபரப்பு சாதனங்களள் களவு போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது கல்வயல் பிள்ளையார் கோயில் மற்றும் கல்வியல் தேவதவனப்பிள்ளையார் கோயில் ஆகிய இரண்டு கோவில்களில் உடைக்கப்பட்டு திருட்டு இடம் பெற்றிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்