Fri. May 17th, 2024

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் லீக்கின் நடுவர்களுக்கு நிவாரண உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் நடுவர்களுக்கு நிவாரண உலர் உணவு பொருட்கள் இன்று அல்வாய் இளம்பிறை சனசமூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.
சர்வதேச கால்பந்தாட்ட நிதிப்பங்களிப்பின் மூலம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஆனது அனைத்து லீக்குகளுக்கும் கொரோணா நிவாரணப் பணிக்காக இரண்டு இலட்சம் ரூபா நிதியை வழங்கியது. அந்நிதியுடன் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் மேலதிகமாக ஒரு லட்சம் ரூபா நிதியை தமது லீக்கிலிருந்து பெற்று 300 வீரர்களுக்கும் மற்றும் நடுவர்களுக்கும் மூன்று கட்டங்களாக வழங்கியுள்ளனர்.
இதில் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் மா.நவநீதமணி, இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் அ.அருளானந்தசோதி, பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் நடுவர் சங்கத் தலைவர்
மு.நவநேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்