பண்டாரிகுளம் பகுதியில் பழைய பாணை விற்ற வர்த்தகர்
வவுனியா – பண்டாரிகுளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பாவனைக்கு பொருத்தமற்ற பழுதடைந்த பாண் விற்பனை செய்த வர்த்தகருடன், நுகர்வோர் முரண்பட்டுள்ளனர்.
இன்று காலை வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பாண் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
இதன்போது இன்று கொண்டவரப்பட்ட புதிய பாண் உள்ளதா என வர்த்தகரிடம் கேட்டபோது அவரும் ஆம் என தெரிவித்து தன்வசம் வைத்திருந்த பாணை விற்பனை செய்துள்ளார்.
அதனை பெற்றுக்கொண்ட நுகர்வோர் வீட்டிற்கு கொண்டு சென்று பாணை சாப்பிட போது அது பழுதடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு வந்த அவர் வர்த்தகரிடம் பாண் பழுதடைந்துள்ளது. புதிய பாண் என்று தந்தீர்களே ஏன் பழுதடைந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் குறித்த வர்த்தக நிலையத்திற்கு பாண் வழங்கும் வெதுப்பகத்தினருடன் குறித்த நுகர்வோர் தொடர்பு கொண்டபோது அவர்கள், தாம் இன்று வர்த்தக நிலையங்களுக்கு பாண் வழங்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த வர்த்தகருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.