Sat. May 4th, 2024

நாளை முதல் சந்தை மூடுமாறு உத்தரவு

நாளை முதல் சந்தை மூடுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு சென்றவர்களுள்  பலரும், அவர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள சந்தைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.  இந்நிலையில் சந்தையில் சனநெருக்கம் காணப்படுகிறது. எனவே நாளை (18) முதல் சந்தைகளை மூடுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,  தம்புள்ளை பகுதியில் இருந்து மரக்கறிகள்,பழங்கள் என்பனவும் பல்வேறு சந்தைக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இது தொடர்பாக வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடி இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள்,  வியாபாரிகள்,  வாடிக்கையாளர்கள் நலன்கருதி நடமாடும் சந்தை உருவாகப்பட்டுள்ளது.எனவே குறிப்பிட்ட ஒரு இடத்தில் பலர் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்