Fri. May 3rd, 2024

நாளை பிற்பகல் வரை மழை தொடரும் – பிரதீபராஜா

நாளை வியாழக்கிழமை பிற்பகல் வரை மழை தொடரக்கூடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக 70 கி.மீ. தொலைவில் காணப்படுகின்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் செறிவடைகின்றது.

இதனால் இத்தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் இடமும் நேரமும் மாற்றமடைந்துள்ளது.
தற்போதைய நிலையின்படி இன்று இரவு திருகோணமலையின் குச்சவெளிக்கும் வெருகலுக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் இயக்கத்துக்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தியைப் பொறுத்து சில வேளைகளில் கரையைக் கடக்கும் இடமும் நேரமும் மாறுபடலாம்.
தற்போது நாடு முழுவதும் கிடைக்கும் பரவலான மழை நாளை பிற்பகல் வரை தொடரக்கூடும்.

-நாகமுத்து பிரதீபராஜா-

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்