Thu. May 2nd, 2024

நவிண்டில் கலைமதி அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான உதைபந்தாட்டப் போட்டியில் போட்டியில்  பலத்த போராட்டத்தின் மத்தியில்  நவிண்டில் கலைமதி அணி இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதியாட்டம் இன்று  ஞாயிற்றுக்கிழமை இமையாணன் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
அரையிறுதியாட்டத்தில் நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து வதிரி பொம்மேர்ஸ் அணி மோதியது.
இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆயினும் கலைமதி அணி வீரர் அபிராம் மிகச் சிறப்பான கோல்லைப் போட்டு அசத்த இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில் கலைமதி அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.  இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில்
 இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடினர் இதனால் அணிகளாலும் மேலதிக கோல் எதனையும் போட முடியவில்லை. இதனால் கலைமதி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்