Sat. May 4th, 2024

நல்லூர் பெண்ணுக்கு கொரோனா

நல்லூர் கோயில் வீதியில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த 11ம் திகதி கொழும்பில் இருந்து நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.  இவர் கொழும்பில் இருந்து வந்தது தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகர் எவருக்கும் தகவல் வழங்காது நடமாடியுள்ளார். அதன் பின்னர் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். அவருக்கான பரிசோதனை முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.  இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்