Wed. May 8th, 2024

தொற்றாளர் அடையாளம் மூத்த விநாயகர் கோயிலடியினருக்கும் பிசிஆர் பரிசோதனை

நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர் கரணவாய்  மூத்தவிநாயகர் கோயிலில் தொண்டாற்றியவர் எனத் தெரியவந்துள்ளது.  இதனையடுத்து மூத்த விநாயகர் கோயிலுடன் தொடர்புபட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் உடுப்பிட்டி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட ஒருவர் நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர் நெருங்கி பழகியவர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது முழுமையான தகவல்களை வழங்க மறுத்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த தொற்றுக்குள்ளானவர் கரணவாய் மூத்த விநாயகர் கோயிலடி திருவிழாவில் தினமும் தொண்டு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோயிலுடன் தொடர்புபட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்