நேற்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
யாழ் மாவட்டத்தில் 27 பேர் உட்பட வடமாகாணத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் சுகாதார பிரிவில் 3 பேருக்கும், வேலணை சுகாதார பிரிவில் 7 பேருக்கும், உடுவில் சுகாதார பிரிவில் 6 பேருக்கும், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 பேருக்கும், மானிப்பாய் வைத்தியசாலையில் இருவருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒருவருக்கும், தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒருவருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 27 பேருக்கும், முல்லைத்தீவில் ஒருவருக்கும், புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும், மன்னாரில் 10 பேருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார பிரிவில் 5 பேருக்கும், வவுனியா சுகாதார பிரிவில் 3பேருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கும், மன்னார் ஒருவருக்கும் என வடமாகாணத்தில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.