Mon. Apr 29th, 2024

தேசிய மட்ட பளுதூக்கல் யாழ் பளுதூக்கும் கழகத்திற்கு 6 பதக்கங்கள்

இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட இளையோர் மற்றும் சிரேஷ்ட பிரிவினருக்கான பளுதூக்கல் போட்டியில் யாழ் பளுதூக்கல் கழகம் ஒரு தங்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர்.

குறித்த போட்டி கடந்த 4ம் திகதி பொலநறுவையில் நடைபெற்றது.
இதில் யாழ் பளுதூக்கும் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி நவநீதா இளையோருக்கான 40 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும்,  இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலய மாணவி மிதினா இளையோருக்கான 49 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும்,  பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளான லிசானா இளையோருக்கான 64 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், யெஸ்மீனா இளையோர் மற்றும் சிரேஷ்ட பிரிவில் வெள்ளிப் பதக்கங்களையும்,  ரம்மியா கனிஸ்ட பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்