தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையத்தின் உறுப்பினர்கள் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் கைது
கொரோணா வைரஸ் தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கினால் நாளாந்த தொழிலை இழந்து வருமானமின்றி மிகவும் கஷ்டமான நிலையில் உள்ள கச்சாய் பாலாவி கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கச் சென்ற தென்மராட்சி சமூக மேம்பாட்டு அமையத்தின் உறுப்பினர்கள் மூவர் கொடிகாமம் பொலிஸாரால் 16/4/2020 வியாழக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டனர்
விசாரணைகளின் பின்னர் மூவரும்
விடுவிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது