Wed. May 8th, 2024

துன்னாலையில் போதைப் பொருளுடன் கைது

நெல்லியடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் போதை பொருள் மற்றும் மாட்டிறைச்சி என்பவற்றுடன் இருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி துன்னாலை பகுதியில் 4 கிராம் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல் குறித்த பகுதியில் அனுமதியின்றி 10கிலோ மாட்டிறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டிலும் ஒருவரை நெல்லியடி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்