Sun. May 19th, 2024

யாழ்பீச் கொலை சம்பவம் இருவர் தடுப்புக் காவலில்

வல்லை பகுதியில் இயங்கும் யாழ்பீச்சில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை தடுப்புக் காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் இருவர்களும் அல்வாய் கிழக்கு மற்றும் குடத்தனை மேற்கு  பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் குடத்தனை மேற்கு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் பொலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவரை வீட்டில் வைத்து நெல்லியடி  பொலீஸார் கைது செய்துள்ளனர். கொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் தலைமறைவாகியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றல் ஆயர்படுத்திய வேளை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்