முன்னாள் ராஜலட்சுமி பத்திரிகைகள் விற்பனையாளர் ரவி காலமானார்
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிரியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஆனந்தராஜா (ரவி) 04.05.2022 புதன்கிழமை இரவு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்னர் பல ஆண்டுகளாக நெல்லியடி சந்தியில் இயங்கிய ராஜலட்சுமி பத்திரிகைகள் விற்பனை நிலையத்தினை நடத்தியவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.