Tue. May 21st, 2024

மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் – பெற்றோர் வேண்டுகோள்

அச்சுவேலி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முடிவடையும் நேரங்களில் பொலீஸார் வீதி கண்காணிப்பில் ஈடுபடுமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அச்சுவேலி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் பலர் மோட்டார் சையிக்கிள்களில் தலைக்கவசமும் அணியாமல் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சையிக்கிளை செலுத்துவதாகவும் அதேபோல் வீதிகளில் இளைஞர்கள் கூட்டம் நின்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகளை ஏற்படுத்தி வருவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதனால் வீதியில் தேவையற்று நிற்கும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்