Mon. May 20th, 2024

நாளை நாடு முழுவதும் தொழிற்சங்கப் போராட்டம்

நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் தொழிற்சங்க போர்ட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

24ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் முகமாக இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கமும் இப்போராட்டற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,  நாளைய தினம் நடைபெறும் போராட்டத்திற்கு அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைத்து வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவியுங்கள் அத்துடன் இது தொழிற்சங்கப் போராட்டம் ஆகையினால் எவரும் சுகயீன லீவுகள் வழங்கத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடமாகாண பிரதிச் செயலாளர் சு.யசீலன் தெரிவிக்கையில்,  அதிபர்கள், ஆசிரியர்கள்,  ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட அனைத்து அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவியுங்கள். ஊழல் நிறைந்த இந்த அரசை வெளியேற்றி புதிய அரசை உருவாக்குவதற்கு அனைவருக்கும் வெளிப்படுத்தவே இப் போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நாளைய தினம் ரயில் சேவைகளும் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்