Sat. Apr 27th, 2024

கரம் தொடரில் அனைத்து வயதுப் பிரிவில் மூளாய் சைவப் பிரகாசா வித்தியாலயம் அசத்தியது

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கரம் தொடரில் ஆண்கள் பெண்களிற்கான அனைத்து வயதுப் பிரிவுகளிலும் மூளாய் சைவப் பிரகாசா வித்தியாலய அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
இதன் இறுதியாட்டம் நேற்று  வியாழக்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில்
முதலாமிடத்தை மூளாய் சைவப் பிரகாசா வித்தியாலய அணியும், இரண்டாமிடத்தை சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியும், மூன்றாமிடத்தை ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் பெற்றன.
17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலாமிடத்தை மூளாய் சைவப் பிரகாசா வித்தியாலய அணியும்,  இரண்டாமிடத்தை சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியும்,  மூன்றாமிடத்தை அராலி சரஸ்வதி வித்தியாலய அணியும் பெற்றன.
20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை மூளாய் சைவப் பிரகாசா வித்தியாலய அணியும், இரண்டாமிடத்தை சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியும், மூன்றாமிடத்தை அராலி சரஸ்வதி வித்தியாலய அணியும் பெற்றன.
20 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் முதலாமிடத்தை மூளாய் சைவப் பிரகாசா வித்தியாலய அணியும்  இரண்டாமிடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரி அணியும், மூன்றாமிடத்தை அராலி சரஸ்வதி வித்தியாலய அணியும் பெற்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்