தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரின் முன்மாதிரியான செயற்பாடு
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் சயந்தன் என்பவரால் வெளிநாட்டில் வாழும் தனது நண்பர்களின் உதவியுடன் பெண்ணை தலைமைத்துவமாக கொண்டு இயங்கிய குடும்பத்தினருக்கு காணி கொள்வனவிற்கான பணவுதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த குடும்பத்தினருக்கு இப்பணவுதவி வழங்கப்பட்டது.
பெரியபுலோ சுழிபுரத்தைத் சேர்ந்த செல்வகுமார் என்பவர் 2020ம் ஆண்டு இடம்பெற்ற கடல் அனர்த்தத்தின் போது உயிரிழந்துள்ளார். 4 பிள்ளைகளுடன் பெண் தலைமைத்துவ குடும்பத்தினருக்கு பொலீஸ் உத்தியோகத்தர் தனது நண்பர்களின் உதவியுடன் காணி கொள்வனவிற்கான பணவுதவி வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னரும் குறித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மூலமாக காட்டுப்புலம் பிரதேசத்தில் காணி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலீஸ் உத்தியோகத்தரின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.