Fri. May 3rd, 2024

டிப்பர் மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவத்தில் சுண்ணாகம் கிழக்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ராஜரத்தினம் பிரகாஷ் வயது 48 என்பவரே உயிரிழந்தவராவார். குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சுன்னாகத்தில் இருந்து மருதனம் மடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார். போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்