டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய கோரி!! -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் போராட்டம்-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று வியாழக்கிழமை காலை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களிற்கும், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க இணைப்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் அவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்த போராட்டக்காரர்கள், அவரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.