Mon. Apr 29th, 2024

ஜனாதிபதி தேர்தல் மாதிரி வாக்கெடுப்பு!! -தனியார் நிறுவனங்களை எச்சரிக்கும் தேர்தல் ஆணைக்குழு-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மாதிரி வாக்கெடுப்புகள் நடத்த வேண்டாம் என்று தனியார் நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில தனியார் நிறுவனங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களிலும் மாதிரி வாக்கெடுப்புக்கள் இடம்பெறுகின்றமை தெரியவந்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் பெறுபேறுகள் சமூகவலைத்தளங்களிலும் வெளியிடப்படுகின்றன. இவை ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு முரணானதாகும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.

இதனால் இவ்வாறான மாதிரி வாக்கெடுப்புக்களை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்