செம்மலை உதயசூரியன் அணி சம்பியன்
முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு கழகம் நடாத்திய அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட தொடரில் செம்மலை உதயசூரியன் அணி சம்பியனாகியது.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முல்லைத்தீவு சென்.யூட் அணியை எதிர்த்து செம்மலை உதயசூரியன் அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் 01:00 என்ற கோல் கணக்கில் உதயசூரியன் அணி வெற்றி பெற்றது சம்பியனானது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக தனுராஜ் அவர்களும், தொடராட்ட நாயகனாக பீற்றர், சிறந்த கோல் காப்பாளராக சாருஜன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.