சுமந்திரன் தலைமையில் அரசாங்க நிதி குழு நியமனம்!!
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் நிதி பற்றிய குழுவுக்கான 13 பேரின் விபரங்களையும் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் அறிவித்தார்.
அதன்படி எம்.ஏ.சுமந்திரன், கெஹலிய ரம்புக்வெல்ல, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சுசந்த புஞ்சி நிலமே, தாரக்க பாலசூரிய, காஞ்சன விஜேசேகர, டிலான் பெரேரா, பிமல் ரத்நாயக்க, மயந்த திஸாநாயக்க, முஜிபுர் ரஹ்மான், ஆசு மாரசிங்க மற்றும் மொஹமட் இஷ்மாயில் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.