Sat. May 4th, 2024

சுன்னாகத்தில் இருந்து வந்த 2 பெண்களை கடத்தமுயற்சி, ஒருவர் தப்பி போலீசில் சரண்

சுன்னாகம் பகுதியிலிருந்து இரண்டு பெண்கள் கொடிகாமம் பகுதியில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இருவரை சந்திக்க வந்துள்ளனர். இதன் போது இருபெண்களையும் அந்த இளைஞர்கள் கொடிகாமம் பகுதியில் இருந்து மாசேரி பகுதிக்கு அழைத்து சென்றனர். அவ்வேளை குடத்தனை பகுதியிலிருந்து வந்த இளைஞர் குழு ஒன்று அப்பெண்களை கடத்தி செல்ல முற்பட்ட பொழுது ஒரு பெண் அவளது குரலை எழுப்பியவாறு அப்பகுதியில் தப்பி பாதுகாப்பு கோரி கொடிகாமம் பொலிஸில்  பாதுகாப்பு அடைந்துள்ளார். அவ்வாறு சரணடைந்த பெண்ண்  பொது மக்களின் உதவியோடு பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து கொடிகாமம் போலீசாரும் பருத்தித்துறை போலீசாரும் இணைந்து மற்றைய காதலர்கள் என்று கூறப்படும் இருவரையும் மற்றும் கடத்தல் சந்தேகநபர்கள் உள்ளிட்டோரையும் வலைவீசி தேடிவருகின்றனர் சம்பவத்தில் தொடர்புடைய காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் குறித்த பெண்கள் இருவரையும் திட்டமிட்டுகடத்தி உள்ளார்கள் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பொலிஸார் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு உள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்