Sat. May 4th, 2024

கிளிநொச்சி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியின் புநகரி நாலாம் கட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரில் இருந்து மணல் ஏற்றி யாழ் நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம் வீதியை கடக்க முற்பட்டமோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கிளிநொச்சி ஜெயபுரம்பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் தவரஞ்சன் என்ற. 41 வயதுடைய இளைஞர் பலியானதுடன் செல்லத்துரை வசந்தகுமார் என்ற நாலு பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  விபத்து இடம்பெற்ற பகுதியை நீதவான் பார்வையிட்டு அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது அப்போது அதிகளவானோர் அங்கு கூடியிருந்தனர். இந்த நிலையில் அமைதியின்மை ஏற்பட்டதால் அப்பகுதி அதிக அளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்