சுதந்திர கட்சியின் ஆதரவை பெரும் முயற்சியில் அமைச்சர் சஜித்
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளா சஜித் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவை கோரி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார் . இதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரம்சிங்கவும் அனுமதிவழங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன
சஜித்பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புள்ளதா என்பதை அறிவதற்காக முதலில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறிஜெயசேகரவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ்காரியவசம் ஊடாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறிஜெயசேகரவை தொடர்புகொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் அவர் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.