சமுர்த்தி அடையாள அட்டையுடன் கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது.
போதைப்பொருளை கடத்தியதாக சந்தேகிக்கும் நபர் சமுர்த்தி அடையாள அட்டையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கழியோடை பாலத்தில் சம்மாந்துறை பொலிஸாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை இச்சந்தேக நபர் கைதானார்.
இதன் பொழுது கைதுசெய்யப்பட்ட நபர் சமூர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அட்டாளைச்சேனை பகுதியில் இருந்து நிந்தவூர் பகுதிக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளதாகவும் பெலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது