கொரோனா நோயாளிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்
தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட
இரண்டு பேருந்துகளும் மரக்கறி ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (15) மாலை வரகாபொலயில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் இந்த விபத்துச் சம்பவத்தில் 29 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காயமடைந்தவர்களில் 26 பேர் தனிமைப்படுத்தலுக்காக அழைதுச் செல்லப்பட்டவர்கள் ஏனைய மூன்று பேரும் கடற்படை வீரர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தலுக்காக 100 பேரை ஏற்றிச் சென்ற மூன்று பேருந்துகளில் இரண்டு பேருந்துகள், லொறி ஒன்றுடன் மோதியுள்ளது. பஸ்கள் சம்பூர் பகுதி நோக்கிச் சென்றதாகவும் மரக்கறி லொறி கொழும்பு நோக்கிச் சென்றதாகவும், வரகாபொல பகுதியில் வைத்து இந்த விபத்து இட்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.