Wed. May 8th, 2024

கோலூன்றி பாய்தலில் மீ்ண்டும் சாதிக்கும் மகாஜன, அருணோதயக் கல்லூரி மாணவர்கள் சாதிப்பு

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.துசாந்தன் வெள்ளிப் பதக்கத்தையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வி.மீனுயன் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகள தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ச.துசாந்தன் 4.10 மீற்ரர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், அளவெட்டி அருணோதயக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த வி.மீனுயன் 3.80 மீற்ரர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர். (21)

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்