தரம் 5 மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு
கரவெட்டி பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களதின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப் பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரவெட்டி பிரதேச செயலர் திருமதி.சிவகாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரவெட்டி அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபரும், வடமராட்சி கல்வி வலய புலமைப் பரீட்சை வழிகாட்டல் வளவாளருமான யசீகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கருத்தரங்கை நடத்தினார்.