Sun. Apr 28th, 2024

கோலூன்றி பாய்தலில் கிண்ணங்களை வழித்துத் துடைத்தது வடமாகாணம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தங்கம் மற்றும் இரு வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றி 3  பதக்கங்களையும் சுவீகரித்துள்ளனர்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று 18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான கோலூன்றி பாய்தலில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த எஸ். திசாந் 4.30 மீற்ரர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும் அதே கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த வி.றுசாந் 4.10 மீற்ரர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.பவிதரன் 4.10 மீற்ரர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்