கொழும்பில் வைத்தியர்களின் கீழ்த்தரமான செயல் , உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தடுப்பூசி
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் கொழும்பு நகரில் உள்ள 22 நிலையங்களில் வைத்து தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அஸ்ட்ரா ஸினிக்கா தடுப்பூசிகளை ஏற்றியுள்ளார்கள். இந்த தடுப்பூசிகள் முன்கள பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்தான குழுவை சேர்ந்தவர்களுக்கு ஏற்றுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதனை சுகாதார அமைச்சும் பாராமுகமாக இருந்துள்ளது. இதனை அவதானித்த பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.
அரசாங்கத்தின் தடுப்பூசி செய்லபாடுகளையும் , கோரோனோ தடுப்பு திடங்களையும் விமர்சிக்கும் இந்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் , தங்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கி கீழ்த்தரமான வேலையில் இறங்கியுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்