Mon. Apr 29th, 2024

கிளிநொச்சியில் திருமணமான உயர்தர மாணவி தற்கொலை

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்று வந்த பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவியின் சடலம் அப்பகுதியில் உள்ள கிணற்றுக்குள் இருந்து மீட்கபட்டுள்ளது.

இவர் அண்மையில் காதல் திருமணம் செய்துள்ள நிலையில் பாடசாலை கல்வியை தொடர்ந்து வந்துள்ளார். கல்வியில் சிறந்து விளங்கிய குறித்த மாணவியின் இந்த முடிவானது  பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்