Tue. May 7th, 2024

கிளிநொச்சியில் கடுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் , மட்காட்டில் இருந்து பயணித்தவர் சில்லுக்குள் விழுந்து பலி மேலும் 30 கோழிகள் பலி

கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்தவர் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை உடைத்துக்கொண்டு கோழி கூட்டின் மீது மோதியுள்ளது. இதன்போது கூட்டிலிருந்த 30 கோழிகளும் இறந்துள்ளன நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரம் ஒன்றில் சாரதியும் சாரதிக்கு அருகில் மட்காட்டில் இருந்து மற்றொருவரும் பயணித்துள்ளனர் இதன்போது மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி கீழே விழுந்து சில்லுக்குள் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வேலியை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த வீட்டு வளவுக்குள் நுழைந்தது அங்கிருந்த கோழி கூட்டின் மீது மோதி நின்றுள்ளது. இதனால் முப்பது கோழிகளும் உயிரிழந்துள்ளன.
உழவு இயந்திரத்தின் சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் 8 ஆம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த நல்லதம்பி யோகேஸ்வரன் (வயது41) என்ற இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சாரதி மற்றும் உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்