இணுவில் பகுதியில் தீயிட்டு கொளுத்தப்பட்ட முச்சக்கர வண்டி
யாழ்ப்பாணம் இணுவில் பாலாவோடை பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று நேற்று இரவு ஒன்பது மணி அளவில் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பாலாவோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்றிரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டது. முச்சக்கர வண்டியின் ஒருபகுதி எரிந்து நாசமாகி விட்டது. இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.