கனகம்மா அறக்கட்டளை UK அமைப்பினரால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு
திருமதி முத்துப்பிள்ளை தம்பிப்பிள்ளையின் ஞாபகார்த்தமாக
கனகம்மா அறக்கட்டளை UK அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பொங்கல் பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கரவெட்டி பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி அலுவலர் திருச்சிற்றம்பலம் உமாசங்கர் அவர்களின் ஏற்பாட்டில் நாளாந்த கடமைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் 28 மாற்றுத் திறனாளிகள் நபர்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்திகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க நாட்டின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி உமாகாந்தன் சிவகாமி கரவெட்டி செஞ்சிலுவைச் சங்க பிரிவுத் தலைவர் சி.ரகுபரன் மற்றும் பிரிவு செயலாளர் த.பகிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.