கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒரு லட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டது
விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக தமது சொந்த நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபா நிதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிக் கெளரவித்தார்.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்மாவட்ட கழகங்களுகிடையிலான உதைபந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் நேற்று சனிக்கிழமை அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் கலந்து கொண்ட கொற்றாவத்தை றேஞ்சஸ் அணிக்கும் அல்வாய் மனோகரா அணிக்கும் தலா 50ஆயிரம் ரூபா வீதம் குறித்த கழகங்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக
இதில் பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.