கடமை அட்டையை பயன்படுத்தி ஊர்சுற்றிய ஜோடி பொலீஸாரால் கைது
கடமை அட்டையை பயன்படுத்தி ஊர்சுற்றிய ஜோடியை பொலீஸார் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் தமது கடமை அடையாள அட்டையை பயன்படுத்தி வீதியில் பயணிக்கலாமென அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதை சாதகமாக பயன்படுத்தி ஊர் சுற்றிய ஜோடியொன்று பொலிசாரிடம் சிக்கியது.
குறித்த ஜோடி இலங்கை மின்சாரசபையின் கடமை அடையாள அட்டையை பாவித்து காரில் சென்று கொண்டிருந்த போது, ஹம்பாந்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெக்கிராவையை சேர்ந்த 32 வயதான இளைஞன் மற்றும் கண்டி, பிலிமத்தலாவயில் வசிக்கும் 20 வயது யுவதியுமே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
அவர்களை ஹம்பாந்தோட்டை நீதிவான் பிணையில் விடுவித்துள்ளார் , கொரோனா பரிசோதனைக்காக வைத்தியசாலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.