Mon. May 6th, 2024

ஒரேநாளில் கோடீஸ்வரரான யாழ். வாசி

யாழ். வலிகாமத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரேநாளில் 3 கோடி 71 இலட்சம் ரூபாவிற்கு அதிபதியாகியுள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15.09.2020) தேசிய லொத்தர் சபையினால் அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட மஹஜன சம்பத (4246) சீட்டிழுப்பில் ஆங்கில எழுத்தும், ஆறு இலக்கங்களும் பொருந்தியதில் அன்றைய சுப்பர் ஜக்பொட் பரிசான 3 கோடியே 71 இலட்சம் (37, 180, 999 ரூபா) வென்றுள்ளார்.

பிரதான வீதி, சங்கானையில் கடந்த மூன்று வருடங்களாக விற்பனை முகவராக A.M லொத்தர் விற்பனை முகவர் நிலையம் நடாத்தி வரும் இதேபகுதியைச் சேர்ந்த AM. த. சகீஜன் விற்பனை செய்த மஹஜன சம்பத சீட்டின் மூலமே மேற்படி பாரிய தொகை வெல்லப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பில் இந்த வருடத்துக்கான முதலாவது கோடீஸ்வரர் பதிவாகியுள்ளதுடன் இவர் மேற்படி சீட்டிழுப்பில் தெரிவாகியுள்ள முன்றாவது கோடீஸ்வரராகவும் விளங்குகிறார்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் சங்கானையில் வேறொரு முகவர் ஊடாக விற்பனை செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பில் 3.8 கோடி ரூபாவும் வெல்லப்பட்டுள்ளதுடன் கடந்த வருடம் சாவகச்சேரியில் ஆறு கோடி ரூபாவும் வெல்லப்பட்டிருந்தது.

இதேவேளை, தமது விற்பனை மூலம் 3 கோடி 71 இலட்சம் ரூபா வெல்லப்பட்டுள்ளமை தொடர்பாக A.M லொத்தர் விற்பனை முகவர் நிலையத்தின் உரிமையாளர் AM. த. சகீஜன் மிகுந்த மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

எங்கள் விற்பனை நிலையம் மூலம் எட்டு இலட்சாதிபதிகள் ஏற்கனவே உருவாகியுள்ளதாகவும், இந்த வருடம் மாசி மாதம்-29 ஆம் திகதி சங்கானையைச் சேர்ந்த ஒருவர் ஐந்து இலட்சம் ரூபாவை வென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்