ஒரு மாதத்தில் 10,000 டெங்கு நோயாளர்கள்!!
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 607 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாத்தில் மாத்திரம் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளான ஐந்தாயிரத்து 580 அடையாளம் காணப்பட்டனர்.
இதனடிப்படையில் மேல் மாகாணத்திலேயே அதிகளவாக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மக்கள் தாம் வாழும் சுற்றுச்சூழல குறித்த அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.